Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்
, ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (10:43 IST)
மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி நடிகையான ஸ்ரீதேவி (54) . நேற்றிரவு துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்டபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. 
 
குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தவுடன் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு பின் இங்கிலிஷ் விங்கிலிஷ், புலி, மாம் போன்ற படங்களில் நடித்தார். இவர்  நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட  பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
 
இந்நிலையில் அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ''ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றுள்ளார்.
 
மேலும் அஸ்வின், சேவாக் தங்களின் இரங்கள் செய்தியை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர், அதில் அஸ்வின் ''ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா? அவரது இழப்பை ஏற்க கடினமாகவுள்ளது. இது தான் வாழ்க்கை போல. அவரின் நலம்விரும்பிகள் அவரது இழப்பை தாங்கி கொள்ள வேண்டும்'' என்றார். சேவாக் “ ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரின் குடுபத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிட வீடியோ காட்சி