Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென கார்த்தியை சந்தித்த இயக்குனர் ஹெச் வினோத்… அப்போ தீரன் 2 உறுதியா?

திடீரென கார்த்தியை சந்தித்த இயக்குனர் ஹெச் வினோத்… அப்போ தீரன் 2 உறுதியா?
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (07:43 IST)
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத், அடுத்து அஜித்தை வைத்து தொடர்ச்சியாக நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களை இயக்கினார். துணிவு படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு கமல் ஹெச் வினோத் படத்தை தொடங்க 2025 ஆம் ஆண்டு ஆகிவிடக் கூடும் என சொல்லப்படுகிறது.

இதனால் இப்போது இயக்குனர் வினோத் அடுத்து தன்னுடைய படமாக தீரன் படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நடிகர் கார்த்தியை இப்போது தஞ்சாவூரில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்துள்ளார் இயக்குனர் ஹெச் வினோத். இதன் மூலம் தீரன் பார்ட் 2 வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூலா?... 1000 கோடி வசூலை நோக்கி அனிமல்!