Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளியல் தொட்டி மரணம்: அமிர்கான் கூறியதை கேட்டதும் கதறி அழுத ஸ்ரீதேவியின் கணவர்

குளியல் தொட்டி மரணம்: அமிர்கான் கூறியதை கேட்டதும் கதறி அழுத ஸ்ரீதேவியின் கணவர்
, புதன், 14 மார்ச் 2018 (14:04 IST)
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் எதிர்பாராத வகையில் துபாயில் குளியல் தொட்டியில் மூழ்கியதால் மரணம் அடந்தார். அவருடைய மறைவால் அவரது கணவரும், இரண்டு மகள்களும் நட்டாற்றில் விடப்பட்டது போல் உள்ளனர்

இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், போனிகபூருக்கு போன் செய்து தனது இரங்கலை தெரிவித்தார். ஸ்ரீதேவி மரணம் அடையும்போது தான் அமெரிக்காவில் இருந்ததாகவும், அதனால் தன்னால் ஸ்ரீதேவியில் இறுதி சடங்கிற்கு வர இயலவில்லை என்றும் அமீர்கான் தெரிவித்தார்

மேலும் தன்னுடைய நண்பர் ஒருவரின் மனைவியும் இதேபோல் குளியல் தொட்டியில் திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் மூழ்கியதாகவும், ஆனால் அவர் சரியான நேரத்தில் இதனை பார்த்ததால் அவரது மனைவியின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினார். இதனை கேட்டு கதறி அழுத போனிகபூர், தானும் சரியான நேரத்தில் கதவை உடைத்து குளியல் அறைக்கு சென்றிருந்தால் ஸ்ரீதேவியை காப்பாற்றியிருக்கலாம் என்று அமீர்கானிடம் கூறினாராம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓலா கேப்புக்கு எதிராக பார்வதி நாயர் ட்வீட்; அதிர்ச்சியான நிறுவனம்