Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா? பொங்கிய அமலா பால்

ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா? பொங்கிய அமலா பால்
, சனி, 12 மே 2018 (14:45 IST)
‘ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
 
அமலா பால், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. சித்திக் இயக்கியுள்ள இந்தப் படம், அடுத்த வாரம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில், இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருவரும் நடித்துள்ளனர்.
 
‘இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால், உங்களுடைய ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படாதா?’ என அமலா பாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ஹீரோயின்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை. விஜய், அரவிந்த் சாமி, சூர்யா, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா? நடிகைகளை மட்டும் ஏன் பெரிதுபடுத்திப் பார்க்கிறீர்கள்?
 
இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும்போது, என் கேரக்டருக்கு குழந்தை இருக்கிறதா, இல்லையா என்றெல்லாம் பார்க்க மாட்டேன். என்னுடைய கேரக்டர் எப்படி இருக்கிறது என்று மட்டும்தான் பார்ப்பேன். கதைக்கு குழந்தை தேவையாக இருந்தால், நடித்துதானே ஆக வேண்டும்? சினிமா ஒரு கலை. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நான் அதில் பார்ப்பது கிடையாது” எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“மிக்க நன்றி காட்ஃபாதர்” – கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி