Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடுக்கு

-சுப்ரபாரதி மணியன்

இடுக்கு
, செவ்வாய், 6 மே 2008 (13:02 IST)
வலி நிவாரண மாத்திரியை விழுங்கினேன் என்பது சட்டென ஞாபகம் வரவில்லை. எல்லாம் அவசரகதியாய் போய்விட்டது. அவசர கதியில் எந்த கணம் மனதை விட்டு அகல்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது. இப்படி மனதிலிருந்து கழன்று போனவை ஏராளம். இப்போதைக்கு வலி நிவாரண மாத்திரை.

வலி நிவாரண மாத்திரை - 200. என்று மருந்துக் கடையில் கேட்டு வாங்கினது, வலி அதிகமாக இருந்தால் 400ஐ சாப்பிடுமாறு மருத்துவர் சிபாரிசு செய்தார். உண்மையான மருத்துவராக இருந்தால் வலி நிவாரண மாத்திரைக்கே சிபாரிசு செய்திருக்க மாட்டார். அப்படியொன்றும் அவர் போலி டக்டர் அல்ல. வயது முதிர்ந்தவர்தான்.

ஆங்கில மருத்துவத்தில் இதைவிடப் பெரிய உபாயம் எதுவுமில்லை என்பது தெரிந்ததுதான். வலியுணர்வை அழித்து மூன்று மணி நேரத்திற்கு சொஸ்தமளிக்கும் வலி நிவாரணியைத் தவிர அவரால் வேறெதையும் பெரிசாய் சிபாரிசு செய்து விட முடியாதுதான். வலி நிவாரணி கொஞ்சூண்டு விஷம் என்று நண்பர் ஒருவர் சொல்வார். பல வருடங்களாய் இந்த விஷத்தை சாப்பிட்டு வருகிறேன். நீலகண்டனாய் ஜீவித்து வருவது பேருவகை தரும் விஷயம்தான். எப்போதாவது அல்சர் மாதிரி வந்து விஷத்தின் அளவு சற்று அதிகமாகியிருப்பதைக் காட்டிவிடும். அதைக் குறிப்பேட்டில் குறிக்க வேண்டிய நாளை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.


சாப்பிட்ட பின்புதான் வலி நிவாரணியை விழுங்கவேண்டும் என்பது விதி. விதியைச் சரியாக கடைபிடித்து வந்திருக்கிறேன். பல சமய‌ங்களில் சாப்பிட்ட பின் நீரருந்தும் போது, சாப்பிட்ட பின் பத்து நிமிடங்களுக்கு உமிழ் நீர் சுரந்து கொண்டே இருக்கும். எனவே அப்போது நீரருந்துதல் நல்லதால்ல என்று குழந்தைகளுக்கு பாலபாடம் கற்றுத் தந்திருக்கிறேன். அவர்களும் பல சமயங்களில் அதை மற்றவர்களுக்குப் பாடமாய் சொல்கிறபோது எனது ஆசிரிய பெருமை உவகை கொள்ள வைத்திருக்கிறது. ஆனா வலி நிவாரணி விஷயத்தில் சாப்பிடாமல் மறந்து போய் விட்டால் என்ன செய்வது என்று சாப்பிட்டு முடிந்த எச்சிற் கையோடு வலி நிவாரணியை அட்டையிலிருந்துப் பிய்த்தெடுத்து வாயில் போட்டுக் கொள்வது உடனடி கர்மமாக இருந்திருக்கிறாது. இன்றைய காலை வேளையில் அதை கர்மமே கண்ணாகச் செய்தா‌ன் என்பதில் தான் ஞாபகப்பிசகு.

இரண்டு சக்கர வாகனத்தை கிளப்புவதற்காய் இடது கையை வாகனத்தின் கியரில் அழுத்திய போது எழுந்த வலி உச்சமாக இருந்தது. வலி நிவாரணியைச் சாப்பிட்டேனா இல்லையா என்பது உறுத்தலாக இருந்தது. காலை உணவிற்குப் பின் எச்சிற் கையோடு சாப்பிட்டிருந்தாலும் வலி உடனே குறைய வாய்ப்பில்லை. இரண்டு மணி நேரம் ஆகி ரத்தத்தில் கலந்த பின்புதான் அது நிவாரணமளிக்கும். அதுவரைக்கும் வலி இருந்துகொண்டேதான் இருக்கும்.

ரத்தத்தில் மாத்திரை கரைவதற்குள்தான் எத்தனை இம்சை. வலி உயிரை சில்லறையாய் பிய்த்தெடுத்து வாட்டிக் கொண்டிருக்கும். ரத்தத்தில் மாத்திரை கலக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பது இன்னொரு பாலபாடம் என்பது ரொம்ப நாளாய் தெரியாமல் இர்ந்தது. பக்கத்து வீட்டில் ஒரு பெண். முப்பத்தைந்து வயதினள். மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவள். தற்கொலை செய்வது பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பாள். கண்ணாடி பாட்டிலை தூள் தூளாக்கி விழுங்குவது, தூக்குமாட்டிக் கொள்வது, சமயலறை கேஸ் சிலின்டர் என்று பட்டியல் இட்டுக் கொண்டே இருப்பாள். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த போதும் இந்தப் பட்டியல் இடுவது தொடர்ந்து கொண்டிருக்கும். ஒரு தரம் இன்னொரு பாலபாடத்தைக் கண்டுபிடித்தாள். ஒரு முதியவர் மருத்துவமனைக்கு உடல் உபாதைக்காக சென்றிருக்கிறார். உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான உயர்ந்த விலை டானிக் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காலை உணவிற்குப் பின்னும், இரவு உணவிற்குப் பின்னும் ஒவ்வொரு ஸ்பூன் சாப்பிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். முதியவர் உடனடி ஆரோக்கிய உயர்விற்காய் முழு டானிக் பாட்டிலையும் ஒரே தினத்தில் ருசிக்கப் போக மரணம் சம்பவித்து விட்டது. இது பற்றி யாரோ பிரஸ்தாபிக்க மொத்தமாய் மருந்தை உபயோகிப்பதன் பலனை அறிந்து கொண்ட அந்தப் பெண் இருபது நாட்களுக்கு...

அளிக்கப்பட்ட மொத்த மாத்திரைகளையும் வேர்க்கடலை உரிப்பது போல் உரித்தெடுத்து விழுங்கிவிட்டாள். சட்டென வாழ ஆசை வந்தது போல சாகக் கூடாது என்று கதறியிருக்கிறாள். மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போய் இரண்டு மணி நேரத்திற்கு சாவகாசமாய் தன் மன அவஸ்தைகளைப் பிறரிடம் விளக்கிக் கொண்டே இருந்திருக்கிறாள். உப்புக் கரைசல் கொடுத்து கொஞ்சம் வாந்தி எடுத்திருக்கிறாள். 2 மணி நேரத்திற்குப் பின்னே ச்ய நினைவு இழந்திருக்கிறாள்.

வலி நிவாரணியை வழங்கி விட்டோம் என்ற நம்பிக்கையில் இரண்டு மணி நேரத்திற்கு வலி தானாகக் குறைந்து போகும். அதற்குப் பின் இரண்டு மணி நேரத்திற்கு வலியின்றி மூளை நரம்புகள் மரத்துப் போக அடுத்த வேளைச் சாப்பாடு வரைக்கும் வலி நிவாரண உத்ரவாதம் கிடைக்கும். அந்த உத்ரவாதத்தை உறுதிப் படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. வலி நிவாரணியை விழுங்கினேனா என்றுமூளைப்பிசகிடுக்கில் தேட ஆரம்பித்தேன்.

கீரைக் குழம்பு சாப்பிட்டது ஞாபகம் வந்தது. பூண்டுக் குழம்புச் செய்யச் சொல்லியிருந்தது ஞாபகப் பிசகாய் போய்விட்டது. மஞ்சள் பொடிக் கலவையில் தயாராகியிருந்த 'முட்டைக் கோஸ்' பொரியலைத் தவிர்த்தது சரியாக ஞாபகம் வந்தது. அதற்கப்புறம் மாத்திரை விஷயத்தில் எதுவரைக்கும் வந்தோம். நீரைக் குடித்தேனே, சீரகத் தண்ணீர் சொம்பு அளவு மிகவும் குறைந்து போயிருந்தது. ஏதோ தூசு மாதிரிக் கூட தென்பட்டதே. தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்க இயலாதே. மிதப்பது அழுக்குத் துணுக்காக இருக்கலாம். அல்லது சீரகத் துணுக்காகக் கூட இருக்கலாம். அந்த அழுக்குத் தோற்ற மாயை நினைத்தபடி நீரைக்குடித்தது ஞாபகம் வந்தது. மாத்திரையைப் பிய்த்தெடுத்துப் போட்டு விட்டுத் தண்ணீரைக் குடித்தேனே என்பதில்தான் ஞாபகப் பிசகு.

வாகனக் கைப்பிடிகளுக்காய் தோள்பட்டை சற்றே உயர்ந்தபோது வலி உச்சமாகியது. ஒற்றைக் கையனாய் அலுவலகத்தில் 10 நாட்கள் சாகசம் செய்தாயிற்று. பல சமயங்களில் நீண்ட விடுமுறை எடுக்க இதொரு வாய்ப்பு என்று கூட தோன்றியது. ஆனால் அலுவலகச் சூழல் மோசமாகிவிட்டது. நஷ்டத்தில் இயங்குபவற்றை மூடிவிடவும், லாபத்தில் இயங்குபவற்றை தனியாருக்கு விற்று விடவுமான மத்திய அரசின் கொள்கை விளக்க நடைமுறையில் தனியாருக்குப் பாதி பங்குகளை இலாகா விற்றாகிவிட்டது. இரண்டு வருடத்தில் முழுக்கத் தனியாருக்கு போய் விடும். அப்போது இந்த வகையான ஒற்றைக் கையர்களுக்கு வாய்ப்பு இருக்குமா...

என்று தொடர்ந்த சந்தேகம் தோள்வலியை வலி நிவாரணி இன்றியே மரத்துப் போகச் செய்துவிடும். அதுவரைக்கும் தோள் வலியுடன் அலுவலக பார வலியையும் சேர்த்து சுமந்து கொண்டுதான் திரிய வேண்டும்.

இரட்டை சக்கர வாகனத்தை பூட்டினேனா இல்லையா என்பது ஞாபகப் பிசகில் சிக்கிக் கொண்டிருந்தது புது விஷயமாகி விட்டது. மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா என்பதோ இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கையில் இன்னொரு அடுக்கில் இந்த சிடுக்கு. வாகனக் கொட்டகைக்குப் போய் சரி பார்த்து வரும் எண்ணம் பத்து நிம்டங்களாய் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. சுற்றிலும் கோப்புகள். இடது கை கோப்பில் பட்டால் கூட தோள்பட்டைக்கு வலி உச்சமாகி சென்று விடுகிறது.


மேலதிகாரி அறையிலிருந்து வரும்போது உடம்பு வியர்க்க ஆரம்பித்தது. இன்றைக்கு முடித்க்டுக் கொடுக்கவேண்டிய கோப்புகளின் பட்டியலை அவர் கொடுத்திருந்தார். அவர் சொன்னதை நிறைவேற்ற இன்னும் 10 கீழ் நிலைப் பணியாளர்கள் வேண்டும். இன்றிரவு மகா சிவராத்திரியாகவும் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் முடிக்க முடியாத பட்சத்தில் நாளை எழுத்து மூலம் விளக்கம் வேறு கொடுக்க வேண்டியிருக்கும்.

உடம்பு படபடப்பில் நடுங்க ஆரம்பித்தது. குடிகாரனைப் போல கை கால்கள் பரபரக்கும் போஇருந்தது. கைகளின் நடுக்கத்தை சுயமாய் உணர்வது கொடுமை. அதை உணர்வது போல கைகள் நடுங்க ஆரம்பித்தன. கை, கால், உடம்பு நடுக்கத்தைத் தவிர்ப்பதற்காய் என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு நிமிடம் அதற்காய் கிடைத்தது பாக்யமாக இருந்தது. மணிபர்சில் இருந்த வலி நிவாரணி மாத்திரை- 200 - இரண்டை எடுத்தேன். உடம்பு படபடப்பிற்கு இத் உபயோகமாகுமா என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது மாத்திரையை விழுங்கவேண்டும். அவ்வளவுதான். பிளாஸ்டிக் ஜக்கில் இருந்த தண்ணீரைப் பார்த்தேன். சிறு கசடாய் ஏதோ மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு மாத்க்டிரை போட்டாயிற்று வேறு வழியில்லை.

கசடை சற்றே ஒதுக்குவதற்காய் இடது கை ஆள்காட்டி விரலை உயர்த்த நினைத்தேன். தோள் வலியால் உயர்த்த முடியவில்லை. இடது தோள் இறுகிப் போய்விட்டது போலிருந்தது. கசடை ஒதுக்கி விட்டால் என்ன... குடிக்கலாம் என்று தோன்றியது. கசடு சீரகத் துணுக்கு போல இருந்தது ஆறுதல் தந்தது. அது சற்றே இடம்பெயர்ந்து அலைக்கழிந்தது. இரண்டு மாத்திரைகளை போட்டு த்ண்ணீர் குடித்தேன்.

சீரகத் துணுக்கு ஞாபகம் வந்தது. காலையில் எச்சிற்கையோடு ஒரு மாத்திரையை எடுத்து சீரகத் துணுக்காய் நினைத்துக் கொண்டே விழுங்கியது ஞாபகப் பிசகிலிருந்து தப்பி சரியாய் வந்தது மனசில்.

நன்றி: பன்முகம் (ஜன.மார்.2003 காலாண்டிதழ்)


Share this Story:

Follow Webdunia tamil