Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 நாடுகளில் வெற்றி வாகை சூடிய முதல் ஆசிய கேப்டன் விராட் கோலி!

3 நாடுகளில் வெற்றி வாகை சூடிய முதல் ஆசிய கேப்டன் விராட் கோலி!
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:03 IST)
தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரே ஆண்டில் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 


 
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியுடன் இணைந்து விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது முதல் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. முதன்முறையாக விராட் கோலி தலைமையில் தற்போது வெற்றி வாகை சூடியுள்ளது.
 
ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளிலும் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
 
தற்போதைய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா (ஜோகன்னஸ்பர்க்), இங்கிலாந்து (ஹெட்டிங்லே), ஆஸ்திரேலியா (அடிலெய்டு) வெற்றி பெற்றுள்ளது.
 
இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று நாடுகளிலும் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோஹ்லியின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு..- அடிலெய்டு டெஸ்ட்டின் 5 நாள் அலசல்