Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கும் தேதி அறிவிப்பு.. 8 அணிகள் பங்கேற்பு..!

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கும் தேதி அறிவிப்பு..  8 அணிகள் பங்கேற்பு..!
, வெள்ளி, 9 ஜூன் 2023 (07:46 IST)
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டு போட்டி தொடங்குவதற்கான தேதிகள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூன் 12-ம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் குவாலிபயர் ஒன்று எலிமினேட்டர் போட்டிகள் சேலத்திலும் குவாலிட்டி 2 மற்றும் இறுதி போட்டி திருநெல்வேலி யில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த போட்டி டிஜிட்டலில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதில் எட்டு அணிகள் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சேப்பாக்கம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நெல்லை, சேலம் மற்றும் மதுரை ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் பிரிமீயர் லீக் தொடரில் லைக்கா கோவை மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லி சாக்கிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதிய நிலையில் மழை வந்ததால் இரு அணிகளுக்கும் கோப்பை பிரித்து கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவுலிங்கில் சொதப்பிய மாதிரி பேட்டிங்கிலும் சொதப்பிய இந்தியா… இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி!