Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவாலான இந்திய அணி; தென் ஆப்பரிக்கவை எச்சரித்த இலங்கை பயிற்சியாளர்

சவாலான இந்திய அணி; தென் ஆப்பரிக்கவை எச்சரித்த இலங்கை பயிற்சியாளர்
, செவ்வாய், 26 டிசம்பர் 2017 (16:00 IST)
இந்திய அணியின் பேட்டிங் வரிசை ரன்கள் எடுத்தால் அது தென் ஆப்பரிக்க அணிக்கு மிகக் கடினமாக அமையும் என இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்குகிறது.
 
உலகளவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆணிகள் போல தென் ஆப்பரிக்க அணியும் பலமான அணிதான். இதனால் அனைத்து போட்டிகளும் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியுள்ளது தென் ஆப்பரிக்க அணியை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர் கூறியதாவது:-
 
இந்திய அணியின் அனைத்து அடிப்படைகளும் சரியாக அமைந்துள்ளன. எல்லா வகையான பிட்சுக்கும் இந்திய அணி தயாராக உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை ரன்கள் எடுத்தால், அது தென் ஆப்பரிக்கா அணிக்கு மிகக் கடினமாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை முழுதாக வென்ற இந்தியா