Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாட்ஸன் அபார சதம்: 204 ரன்கள் குவித்தது சென்னை அணி

வாட்ஸன் அபார சதம்: 204 ரன்கள் குவித்தது சென்னை அணி
, வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (21:55 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது புனே நகரில் 17வது போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால், சென்னை அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வாட்ஸன் அதிரடியாக விளையாடி 106 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.
 
ராஜஸ்தான் தரப்பில் கோபால் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுக்களையும், லாஹின் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். வெற்றி பெற 205 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு