Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா தலையில் பந்து தாக்கி மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்: வீரர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா தலையில் பந்து தாக்கி மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்: வீரர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா தலையில் பந்து தாக்கி மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்: வீரர்கள் அதிர்ச்சி!
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (12:23 IST)
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலிப் டிராபியில் விளையாடிய போது தலையில் பந்து தாக்கி இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா காயமடைந்துள்ளார்.


 
 
துலிப் டிராபியில் இந்தியா புளூ- இந்தியா கிரீன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கீரின் அணிக்காக விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா பீல்டிங்கில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பந்து அவரது தலையில் தாக்கியது.
 
பந்து  தலையில் தாக்கியதால் நிலை தடுமாறிய ஒஜா  மைதானத்திலே மயக்கமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரக்யான் ஓஜா தற்போது நலமாக இருக்கிறார் என்று அரைமயக்கத்துடன் பயிற்சியாளர் ராமன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’நீங்களும் விராட் கோலி ஆக முடியும்’ - கெய்ல் அதிரடி