Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி ஒரு பந்தை சந்தித்த தல தோனி.. அதிலும் ஒரு பவுண்ட்ரி.. அதிர்ந்தது சேப்பாக்கம்..!

கடைசி ஒரு பந்தை சந்தித்த தல தோனி.. அதிலும் ஒரு பவுண்ட்ரி.. அதிர்ந்தது சேப்பாக்கம்..!

Siva

, செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (21:28 IST)
ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் கேப்டன் ருத்ராஜ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சதம் அடித்தார் என்பது அவர் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவருக்கு உறுதுணையாக இருந்த ஷிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். கடைசி இரண்டு பந்துகள் இருக்கும்போது களமிறங்கிய தோனி முதலில் ரன்னர் சைடு நின்றாலும் அதன் பிறகு அவருக்கு ஒரே ஒரு பந்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது என்பதும் அந்த ஒரு பந்திலும் அவர் பவுண்டரி அடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட இருக்கும் லக்னோ இந்த இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஎஸ்கே - லக்னோ போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!