ஆங்கிலேய மனோநிலை புரியாமல் பேசும் அப்பாவி கெவின் பீட்டர்சன்!
, செவ்வாய், 7 ஜனவரி 2014 (16:00 IST)
ஆஸ்ட்ரேலியாவிடம் வரலாறு காணாத 5- 0 என்று டெஸ்ட் உதை பெற்ற இங்கிலாந்து அணியின் முக்கிய உறுப்பினர் கெவின் பீட்டர்சன் ஆங்கிலேயர்களின் மனநிலை தெரியாமல் தான் 10,000 ரன்களை எடுக்கவேண்டும் என்றும், ஆஷஸ் தோல்விக்கு பழிக்குப் பழி வாங்குவேன் என்றும் பேசி வருகிறார்.
இந்த ஆஷஸ் தொடரில் பீட்டர்சன் 5 டெஸ்ட்களிலும் சேர்த்து 294 ரன்களை 30 ரன்கள் சராசரி என்ற விகிதத்தில் பெற்றுள்ளார்.எப்பவுமே இதுபோன்ற தோல்விகளுக்குப்பிறகு யாரையாவது பலிகடாவாக்கவேண்டும் என்று ஆங்கிலேயர்கள் நினைப்பது வழக்கம்! அதுவும் அவர் அயல்நாட்டு வீரராக இருந்தால் பிரமாதம் என்று யோசிப்பது இங்கிலிஷ் ஸ்டைல். பீட்டர்சன் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். ஒருநாளும் நான் ஆங்கிலேயன் அல்ல என்றெல்லாம் அவர் பேசியிருக்கிறார்.இந்தத் தோல்விகளுக்கு யாரை பலி கடாவாக்கலாம் என்ற போக்கு இப்போதே இங்கிலாந்து அணி நிர்வாகத்தினரிடம் ரகசிய வியாஜ்ஜியம் கொண்டுள்ளது.
இந்த நிலையில், "ஆதரவளித்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு நன்றி, மீண்டும் ஆஷஸ் கலசத்தை திரும்பப் பெற்றுத் தருவதுதான் என் வேலை" என்று கூறுகிறார் அப்பாவியாக.