Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா: 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா: 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (18:05 IST)
விஸ்வகர்மா ஜெயந்தி நேற்று (17-09-18) நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூரில் விஸ்வகர்மா ஜெயந்தி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், எழுந்தருளியுள்ள விஸ்வகர்மாவிற்காக, தொழில்கள் மேலோங்க, சுமார் 1008 பால்குடங்கள் எடுத்து வரப்பட்டு, விஸ்வகர்மாவிற்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.



பின்னர் நடைபெற்ற மஹா தீபாராதனையில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா அருள் பெற்றனர். முன்னதாக வீராட் விஸ்வகர்ம ஹோமம், ப்ரம்ம காயத்திரி ஹோமம், நவக்கிரஹ ஹோமங்களும், பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ விராட் விஸ்வகர்மா அருள் பெற்றனர்.


சி.ஆனந்தகுமார்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா