Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரின் நண்பருடன் உல்லாசம்! கண்டுபிடித்த கணவருக்கு நடந்த கொடூரம்! – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்!

கணவரின் நண்பருடன் உல்லாசம்! கண்டுபிடித்த கணவருக்கு நடந்த கொடூரம்! – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

, திங்கள், 6 மே 2024 (13:11 IST)
நாமக்கலில் கணவரின் நண்பரோடு கள்ளக்காதலில் இருந்த பெண், அதை எதிர்த்து கேட்ட கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள நெ3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நெ3 கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கந்தசாமி. கந்தசாமியும், பழனிவேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக உள்ளவர்கள். இதனால் பழனிவேலை பார்க்க கந்தசாமி அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

அவ்வாறு அடிக்கடி அங்கு சென்ற கந்தசாமிக்கும், பழனிவேல் மனைவி செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக இந்த பழக்கம் மாறிய நிலையில் இருவரும் பழனிவேல் இல்லாத சமயத்தில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் இந்த உண்மை பழனிவேலுக்கு தெரிய வர அவர் செல்வியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் இருவரும் சந்தித்து பேசவும் இடையூறாக இருந்துள்ளார். தாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருக்கும் பழனிவேலை கொல்ல அவரது மனைவியான செல்வியும், ஊராட்சி தலைவர் கந்தசாமியும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சேலத்தை சேர்ந்த கூலிப்படை ஆளான ரவி என்பவரையும் வரவழைத்துள்ளனர்.


சம்பவத்தன்று பழனிவேலுக்கு நிறைய மதுவை ஊற்றிக் கொடுத்து முழு போதையில் ஆயிப்பாளையம் ரயில்வே தண்டவாளம் அருகே கொண்டு சென்று கத்தியால் குத்திக் கொன்று ட்ராக்கில் போட்டுள்ளனர். ட்ராக்கில் பிணம் கிடக்கும் தகவலறிந்து வந்து பழனிவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது மனைவி செல்வியிடம் விசாரித்தபோது அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரது செல்போனை ட்ராக் செய்ததில் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியுடன் அடுக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளது. போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில் செல்வி நடந்தவற்றை ஒப்புக்கொண்ட நிலையில் போலீஸார் தலைமறைவான கந்தசாமியையும், கூலிப்படை கொலைக்காரன் ரவியையும் தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் இன்று ஆஜர்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு..!