Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவை தேர்தலில் போட்டியிடாதது ஏன்..? ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதில்..!!

Nirmala

Senthil Velan

, செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:51 IST)
கட்சி தலைமை உத்தரவிட்டால் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் இல்லையென்றால் போட்டியிட முடியாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். மக்களவைத் தேர்தலில்  போட்டியிட பணம் இல்லை என்று நீங்கள் தெரிவித்ததாக அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தேர்தலில் போட்டியிட முடியும் என்றார்.
 
யாரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதை கட்சி தலைமை  தீர்மானிக்கும் என்றும் எங்கள் கட்சி எப்போது தீர்மானிக்கிறதோ, அப்போது தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

 
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பணம் வருகிறது என திமுக கூறுகிறது என்றும் ஏன், திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் வரவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  திமுகவுக்கு  ஒரே நபரிடம் இருந்து 90 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் நிரந்தர பிரதமராக நரேந்திர மோடி இருப்பார்.வாக்கு சேகரிப்பில்- ஓபிஎஸ் பேச்சு