Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம்.. விஜயகாந்த் அறிவிப்பு..!

சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம்.. விஜயகாந்த் அறிவிப்பு..!
, ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (10:45 IST)
சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 9ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில் தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் வரும் செப். 9-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது.
 
இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை அளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுனர் - அமித்ஷா சந்திப்பு.. ஒரே நாடு ஒரே தேர்தலால் திமுக அரசுக்கு ஆபத்தா?