Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சியில் வங்கியில் கைவரிசை காட்டிய திருடர்கள் ... ரூ. 5 கோடி நகை திருட்டு ...

திருச்சியில் வங்கியில் கைவரிசை காட்டிய திருடர்கள் ... ரூ. 5 கோடி நகை திருட்டு ...
, திங்கள், 28 ஜனவரி 2019 (13:21 IST)
திருச்சி சமயபுரம் பகுதியில்  இயங்கிவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் பகுதியில் இயங்கி வந்த பஞ்சாப் நேட்ஷனல் வங்கியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2 நாள் விடுமுறைக்கு பின்னர் வங்கியில் நடைபெற்ற திருட்டு தற்போது தெரியவந்துள்ளது.
 
வங்கியில் பின்பக்க சுவரை உடைத்து வங்கிக்குள் சென்ற திருடர்கள் வங்கியில் இருந்த 5 லாக்கர்களை கேஸ் வெல்டிங் மூலமாக உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
 
இதில் கொள்ளையர்கள் பயன்படுத்திய கேஸ் வெல்டிங் இயந்திரம்,சுத்தியல் , ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். சுமார் 5 கோடி மதிபுள்ள 500 சவரன் அளவிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகின்றன.
 
மேலும் வங்கிக்குச் சொந்தமான லாக்கர் எதுவும் உடைக்கப்படவில்லை. மாறாக தனி நபர்களின் நகைகள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருச்சி போலீஸார் விசாரணை நடத்தி , கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் - அரசு அறிவிப்பு