Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார்.'' - கமல்ஹாசன்

''கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார்.'' - கமல்ஹாசன்
, புதன், 12 ஜூலை 2023 (16:56 IST)
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1977 ஆம் ஆண்டு  கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில், பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளியான படம் 16 வயதினிலே. இப்படத்தை எஸ்.ஏ.ராஜ்கண்ணு.

அதன்பின்னர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கன்னி பருவத்திலே, கிழக்கே போகும் ரயில், மகா நதி உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

இவர், பல முன்னணி நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் ஆவார். உடல் நலக்குறைவால் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் கடைகளில் நேர மாற்றம் உண்டா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்..!