Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிப்ரவரியில் தமிழக அரசியலில் புயல் அடிக்கும்: காரணங்கள் உள்ளே!

பிப்ரவரியில் தமிழக அரசியலில் புயல் அடிக்கும்: காரணங்கள் உள்ளே!
, செவ்வாய், 30 ஜனவரி 2018 (13:40 IST)
எடப்பாடி, பன்னீருக்கு சாதகமாக அடித்து வந்த டெல்லி காற்று தற்போது புயலாக மாறி அவர்களை கவிழ்க்கும் சக்தியாக உருவெடுத்து வருவதாக அரசியல் வானிலை கூறுகிறது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி மேலிடத்துக்கு ஒரு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. அதில் தமிழக பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சி தமிழகத்தில் மேலும், மேலும் சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இதற்கு காரணம் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மிகவும் மோசமாக இருப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் தமிழக பாஜக இந்த அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து வருகிறது. பாஜக மீது மேலும் வெறுப்பு உண்டாக இதுதான் காரணம் எனப்படுகிறது. இந்த ரிப்போர்ட்டை பார்த்த தலைமை படு டென்ஷனாக உள்ளதாம்.
 
எடப்பாடி அரசு மீது நடவடிக்கை எடுக்கலாமா என ஆலோசனை எல்லாம் டெல்லி தரப்பு நடத்தியதாக தகவல் வருகிறது. இந்த ஆலோசனையில், தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கு, திமுக தொடர்ந்த குட்கா வழக்கு என அனைத்திலும் விரைவில் தீர்ப்பு வந்துவிடும்.
 
இந்த தீர்ப்புகள் அனைத்தும் எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் வரும் என கூறப்படுகிறது. அப்போது அதையே காரணமாக வைத்து எடப்பாடி அரசின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை எப்படி இருக்கும் என்றால், ஆட்சியை கலைத்து ஆளுநரைப் பயன்படுத்தி இப்போதைக்கு நிர்வாகம் செய்யலாம் என்பது. எனவே பிப்ரவரி மாதம் தமிழக அரசியலில் புயல் அடிக்கும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன் கைது