Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரமுத்து விவகாரத்தில் ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? தமிழிசை கேள்வி

வைரமுத்து விவகாரத்தில் ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? தமிழிசை கேள்வி
, திங்கள், 15 அக்டோபர் 2018 (13:21 IST)
எல்லா விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்திற்கு மட்டும் ஏன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீடூவில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். வைரமுத்து மட்டுமல்லாமல் அவர் பல முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இதற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சிப் பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.
 
தமிழகத்தில் நடைபெறும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் குரல் கொடுக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்தில் எந்த கருத்தையும் கூறாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்? வைரமுத்து திமுகவிற்கு வேண்டியவர் என்பதாலயா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரை பிரிந்து வாழும் பெண் மீது ஆசிட் வீச்சு: சேலத்தில் கொடூரம்