Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக எம்.பி.,களுக்கு தமிழிசை சவால்

தமிழக எம்.பி.,களுக்கு தமிழிசை சவால்
, திங்கள், 26 மார்ச் 2018 (14:45 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்காக தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி  உள்பட ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் திமுகவுக்கு 4 எம்பிக்களும், பாமகவுக்கு ஒரு எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எம்பியே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் 37 மக்களவை எம்பிக்களையும், 13 மாநிலங்களைவை உறுப்பினர்களையும் ஆக மொத்தம் 50 எம்பிக்களை வைத்துள்ள அதிமுக இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia
இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வதாக பயமுறுத்தாமல், அதனை செயலில் காட்ட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை திமுகவின் 4 எம்பிக்களும், பாமகவின் ஒரு எம்பியும் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள்?