Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்சென்னையை ஒதுக்கியது தமிழிசைக்கு அதிருப்தியா? திமுக கோட்டையில் வெற்றி கிடைக்குமா?

தென்சென்னையை ஒதுக்கியது தமிழிசைக்கு அதிருப்தியா? திமுக கோட்டையில் வெற்றி கிடைக்குமா?

Siva

, வியாழன், 21 மார்ச் 2024 (19:45 IST)
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிய  நிலையில் அதில் சமீபத்தில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு தென்சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தென்சென்னை தொகுதியை ஒதுக்கியதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தென் சென்னை தொகுதியில்  கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களத்தில் இறங்கி உள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை சௌந்தர்ராஜன் திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி தொகுதியை தான் கேட்டதாகவும் ஆனால் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் மற்றும் கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட இருப்பதால் வேறு வழி என்று அவருக்கு தென் சென்னை ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரும் தென்சென்னையை போட்டியிட நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மும்முனை போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!