Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

17 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை - எங்கெங்கு தெரியுமா?

17 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை - எங்கெங்கு தெரியுமா?
, புதன், 15 ஜூன் 2022 (13:01 IST)
இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
தமிழ்நாட்டில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் ஜூன் 19 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பேரளம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: முடிவுகள் எப்போது?