Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாறன் சகோதரர்களின் விடுதலை தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி

மாறன் சகோதரர்களின் விடுதலை தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி
, திங்கள், 30 ஜூலை 2018 (15:09 IST)
பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, சட்டவிரோத பிஎஸ்என்எல் எக்சேஞ்ச் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.  
 
தயாநிதி மாறன் 2004-2007 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் ஒன்றை நடத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினார். அதோடு இந்த இணைப்புகளை கலாநிதி மாறனின் சன் டிவிக்கு பயன்படுத்தியதாகவும் ரூ1.78 கோடி அரசுக்கு இழப்பு என்றும் சிபிஐ குற்றம்சாட்டியது.  
 
இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஏழு பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மாறன் சகோதர்களை கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது. 
webdunia
சிபிஐ தரப்பில் செய்யப்பட மேல்முறையீட்டின் தீர்ப்பு ஜூலை 25ஆம் தேதி வெளியானது. அதில், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதோடு, சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்தனர்.
webdunia
இதனை எதிர்த்து தயாநிதி மாறன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு தயாநிதி மாறனின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஜிபி + 500 எஸ்எம்எஸ் + அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்....