Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுப்பராயனுக்கு விதிகளை தளர்த்திய இந்திய கம்யூனிஸ்ட்.. மீண்டும் திருப்பூரில் போட்டி..!

சுப்பராயனுக்கு விதிகளை தளர்த்திய இந்திய கம்யூனிஸ்ட்.. மீண்டும் திருப்பூரில் போட்டி..!

Mahendran

, புதன், 20 மார்ச் 2024 (14:03 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விதியில் 75 வயதுக்கு மேற்பட்டவருக்கு பதவி மற்றும் தேர்தlஇல் போட்டியிட வாய்ப்பு கிடையாது என்றும் இரண்டு முறை போட்டியிட்டவர்கள் மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதியை தளர்த்தி சுப்பராயனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார் 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை 75 வயது கடந்தவர்களுக்கு பதவி பொறுப்பு வழங்கப்படாது என்ற விதியையும் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற விதியையும் கடைபிடித்து வந்த நிலையில் சுப்பராயனுக்காக கட்சி விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டு மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது 
 
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தன்னை இணைத்துக் கொண்ட சுப்பராயன் அவர்கள் திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு சாதாரண மில் தொழிலாளியாக இருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
76 வயதாகும் சுப்பராயன் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை  அவர் கண்டிப்பாக இந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின்.! தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது..! உச்ச நீதிமன்றம்...