Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு; இந்திய மாணவர் சங்கம் தர்ணா போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு;  இந்திய மாணவர் சங்கம் தர்ணா போராட்டம்
, செவ்வாய், 27 மார்ச் 2018 (09:42 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது தூத்துக்குடி பகுதியில் இந்திய மாணவர் சங்கம் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் நேற்று வ.உ. சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
webdunia
இதனைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே ஆலையை மூட வலியுறுத்தி,  இந்திய மாணவர்கள் சங்கம்   கோஷங்கள் எழுப்பியபடி தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்? தமிழகம் அதிர்ச்சி