Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!
, ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (08:46 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
இதனால் மேற்கண்ட 6 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை! பக்தர்கள் அதிருப்தி..!