Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலையை பார்த்து டெல்லி தலைமை ஏமாந்து வருகிறது: பாமக பிரமுகர் கருத்து..!

Annamalai

Siva

, ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:46 IST)
அண்ணாமலையை பார்த்து டெல்லி தலைமை ஏமாந்து வருகிறது என பாமக பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார் 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் நிற்கப் போகிறோம்? என்பதெல்லாம் கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய திலகபாமா எங்கள் கட்சி வலிமையானது என்பதால் கால அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது என்று தெரிவித்தார் 
 
அண்ணாமலை குறித்து அவர் கூறிய போது ’அண்ணாமலை நடத்தியது போலியான பாதயாத்திரை என்றும் இயற்கையாகவும் எதார்த்தமாகவும் இல்லை என்று கூறியவர் அண்ணாமலையை துடிப்பான தலைவராக பார்த்து டெல்லி தலைவை ஏமாந்து வருகிறது என்றும் செல்லூர் ராஜூ கூட தான் அதிக மக்களிடம் போய் சேர்ந்தார், ஆனால் அதற்காக அவரை பாசிட்டிவாக பார்ப்பதா என்றும் அவர் கூறினார் 
 
நான் கூட ஐபிஎஸ் படித்தவர் என்பதால் அவரிடம் அதிகமாக எதிர்பார்த்தேன் என்றும் ஆனால் ஏமாந்து விட்டேன் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர்.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!