Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
, புதன், 8 ஆகஸ்ட் 2018 (11:20 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த இந்திய பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மோடியை வரவேற்றனர்.
webdunia
ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்த மோடி, கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுனார். மேலும் ராசாத்தி அம்மாள், கனிமொழி, ஸ்டாலின் ஆகிய திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு மோடி ஆறுதல் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீர்ப்பு கேட்டு கண்ணீர் விட்ட கை கூப்பிய மு.க.ஸ்டாலின்...