Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி

குவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி
, செவ்வாய், 22 மே 2018 (11:37 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தி வரும் கூட்டம் கிளர்ச்சி போராட்டமாக மாறியுள்ளது.

 
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.  
 
அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன.   
webdunia

 
இதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் 100வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்ற்றுகையிடவும் திட்டமிட்டு அப்பகுதி மக்கள் 50,000 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கியும் இன்னொரு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் இன்று காலை சென்றனர்.
 
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மக்கள் போலீஸார் மீது கல் வீசியும், போலீஸ் வாகனத்தை அடித்தும் நொறுக்கினர். இதனையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியே கலவர பூமியாக காணப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
webdunia

 
அப்போது, போலீசாரின் வாகனங்களை பொதுமக்கள் சேதப்படுத்தினர். மேலும், சில வாகனங்களை கழித்து பொதுமக்கள் கவிழ்த்து போட்டனர். அதோடு, கற்களை கொண்டு போலீசாரை தாக்கினர். ஒரு கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து போலீசாரின் மீது கற்களை எறிந்ததால், பின் வாங்கிய போலீசார் சுவர்கள் மீது ஏறி தப்பி ஓடினர்.  போராட்டக்காரர்கள் கல்வீசு தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. எனவே, அந்த பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன. அந்த பகுதியே தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால், 100க்கும் குறைவான போலீசார் இருப்பதால் அவர்களால் பொதுமக்களின் எதிர்ப்பை சந்திக்க முடியாமல் பின் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலவர பூமியான தூத்துக்குடி - ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் தடியடி