Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓபிஎஸ் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓபிஎஸ் அதிரடி

Mahendran

, திங்கள், 5 பிப்ரவரி 2024 (13:48 IST)
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்ட எதையும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இரண்டு கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்கிறார் என்றும் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்றும் எனவே நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.  

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் கண்டிப்பாக எங்கள் பக்கம் நியாயம் இருப்பதால் எங்களுக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஓபிஎஸ் சொல்வது போல் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறை..! ரூ.1 கோடி அபராதம்..! வருகிறது புதிய சட்டம்.!!