Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ் பேசி கொண்டிருந்தபோது பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி: சேலத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் பேசி கொண்டிருந்தபோது பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி: சேலத்தில் பரபரப்பு..!

Siva

, செவ்வாய், 19 மார்ச் 2024 (13:47 IST)
சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளையும் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென பாஜக நிர்வாகி அவரை பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு பாரத் மாதா கி ஜே என முழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று சேலத்தில் நடந்து வரும்போது கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன், வாசன், ஓ பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ், ஜான் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் இந்த மேடையில் பேசிக்கொண்டிருந்த போது தமிழகத்திற்கு ஒரே கையெழுத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை அரசாணை மூலம் வழங்கியது பாரதப் பிரதமர் மோடி தான் என்று அவர் பேசிக் கொண்டிருந்தார்

அப்போது திடீரென பாஜக நிர்வாகி ஒருவர்  அவரை பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு பிரதமர் வருவதை குறிப்பிட்டு பாரத் மாதா கி ஜே, தேசிய தலைவர் பிரதமர் மோடிஜி என்று முழங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலம் பொதுக்கூட்டம்..! மோடியை புகழ்ந்து தள்ளிய கூட்டணி தலைவர்கள்..!!