Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி தமிழகத்திற்கு வரும் நாள் திருநாள்: பொன்னார்!

மோடி தமிழகத்திற்கு வரும் நாள் திருநாள்: பொன்னார்!
, திங்கள், 28 ஜனவரி 2019 (17:40 IST)
நேற்று தமிழகம் வந்து கோ பேக் மோடி ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கிய மோடி, தற்போது மீண்டும் வரும் பிப்ரவரி 19ம் தேதியும் தமிழகம் வருகை தருகிறார். இந்த தகவலை பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார். 

 
அதாவது, குமரி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ள சுமார் 40,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், சாலை, மற்றும் பாலங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவும் மோடி கன்னியாகுமரி வருகிறாராம். 
 
இதோடு, கன்னியாகுமரி நான்கு வழி சாலை தொடக்க பகுதியில் (ஸீரோ பாயிண்ட்) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் உள்ளாராம். இந்த செய்தியை உறுதி செய்துள்ள பாஜக முக்கிய தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து பேசியது பின்வருமாறு, 
webdunia
டெல்லியில் இருப்பது போல் ஒரு மருத்துவமனையை நேற்று மதுரையில் வர பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும் போதும் அது திருநாளாக மாறுகிறது. 
 
தமிழக முன்னேற்றத்திற்கு மத்திய அரசு லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளது. நரேந்திர மோடி வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை சின்னப்பிள்ளை: பள்ளிக்கே செல்லாமல் பத்மபூஷன் விருது பெற்ற இவர் யார்?