Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் கட்சியில் இணைவது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை: அழகிரி

நான் கட்சியில் இணைவது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை: அழகிரி
, திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (19:12 IST)
குடும்ப உறுப்பினர்கள் யாரும் நான் கட்சியில் இணைவது குறித்து பேசியதில்லை. அவர்களுக்கு அக்கறை இல்லை என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

 
மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
அதன்பிறகு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரியிடம் கட்சியில் அவரை சேர்ப்பது குறித்து குடும்பத்தினரிடம் பேசி சரிசெய்யலாமே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, குடும்ப உறுப்பினர்கள் யாரும் நான் கட்சியில் இணைவது குறித்து பேசியதில்லை. அவர்களுக்கு அக்கறையும் இல்லை என்று கூறினார்.
 
நாளை செயற்குழு கூட்டத்திற்கு பின் கட்சியில் யாருக்க்கு என்ன பொறுப்புகள் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார். இதையடுத்து அவர் தற்போது வகித்து வரும் செயல் தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
கனிமொழியுடன் தனக்கு ஏதாவது அதிகாரம் மிக்க உள்ள பதவி கிடைக்கும் என்று அவரும் எதிர்பார்ப்புடன் உள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: மோடி கான்ஃபிடெண்ட்!