Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
, சனி, 9 செப்டம்பர் 2023 (15:10 IST)
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார் என்பதும் அதில் சனாதனத்தை ஒழிப்போம் என்று ஆவேசமாக பேசினார் என்பதும் தெரிந்ததே.
 
 அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் உத்தர பிரதேச மாநில  சாமியார் ஒருவர்  அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில்  திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்க தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியை போனாலும் கவலை இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்