Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை ரயில் விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி!

madurai accident
, சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:59 IST)
உத்தரபிரதேசம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்த  சுமார் 60 -க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர்.

பல்வேறு கோயில்களுக்குச் சென்றுவிட்டு, இன்று அதிகாலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பயணிகள் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்திற்கு, சட்டவிரோதமமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததுதான் காரணம் என்று  தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

இந்த நிலையில், ‘’உயிரிழந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்  நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக ‘’அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’உயிர் பிழைத்தவர்களை ரயில்வே நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும்: வானிலை எச்சரிக்கை..!