Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை...

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை...
, வியாழன், 15 மார்ச் 2018 (18:40 IST)
நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.. என்று பதிவு செய்திருந்தார்.
 
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு நிறுத்தாமல் சிலை உடைப்புகள் நடைபெற்றது. இந்த சர்ச்சை தற்போது அடங்கிய நிலையில், தற்போது பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
காவி உடை மற்றுமின்றி மாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிழிந்த சட்டை இல்லனா கருப்பு சட்டை: ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை