Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்வோம்; நவநீதகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்வோம்; நவநீதகிருஷ்ணன் ஆவேச பேச்சு!
, புதன், 28 மார்ச் 2018 (16:23 IST)
காவிரி மேலாண்மை அமைக்காவிடில் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் என்று அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக கூறியுள்ளார்.

 
உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
 
அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நவநீதிகிருஷ்ணன் ஆவேசமாக பேசியுள்ளார். 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் என்றும் இதை அமல்படுத்தவில்லை என்றால் பின்னர் அரசியல் சாசனம் எதற்கு? என்றும் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக்கருக்காக உச்ச நீதிமன்றம் போன எடப்பாடி-ஓபிஎஸ் : காவிரி விஷயத்துக்கு?..