Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியார் சிலை பதிவை நான் போடவே இல்லை: எச்.ராஜா மறுப்பு

பெரியார் சிலை பதிவை நான் போடவே இல்லை: எச்.ராஜா மறுப்பு
, புதன், 7 மார்ச் 2018 (09:23 IST)
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சிலமணி நேரங்களில் நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பெரியார் பதிவை தான் பதிவு செய்யவில்லை என்றும், தன்னுடைய அனுமதியின்றி அட்மின் செய்த பதிவு என்றும், இந்த பிரச்சனை பூதாகரமான ஆனதை அறிந்து தான் அந்த பதிவை நீக்கிவிட்டதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது.

இவ்வாறு எச்.ராஜா தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித், விஜய்க்கு இல்லாத தைரியத்துடன் ஜிவி பிரகாஷ்