Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஜிவி பிரகாஷ் நேரில் ஆறுதல்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஜிவி பிரகாஷ் நேரில் ஆறுதல்
, ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (21:42 IST)
பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் கடந்த சில நாட்களாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இன்று நாகர்கோவில் சென்ற அவர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய அவரிடம் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஜல்லிக்கட்டு சமயத்தில் முழு ஆதரவு கொடுத்த மீனவர்கள் தற்போது புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி உள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறுவதற்காகவே நேரில் வந்ததாக ஜிவி பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ஐகேன்’ அமைப்பின் தலைவர்