Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மயக்க மருந்து செலுத்தியதும் மரணம் - தனியார் மருத்துவமனையில் பரபரப்பு!

மயக்க மருந்து செலுத்தியதும் மரணம் - தனியார் மருத்துவமனையில் பரபரப்பு!
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (09:38 IST)
தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு.


சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகர் கொத்தங்குடிதோப்பு பகுதியைச் ய சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி வசந்தா(55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து தொடையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் உள்ள ஒரு தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக அவருக்கு மயக்கம் மருந்து அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் சிறிது நேரத்தில் வசந்தா திடீரென உயிரிழந்துள்ளார். இந்த தகவலை மருத்துவர்கள் கூறியதும் அதிர்ச்சி அடைந்த அவரக உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அப்போது ஒருவர் அங்கிருந்து மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த வசந்தாவின் கணவர் பழனிவேல் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதிக்கு மூளை பக்கவாதமா?