Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் 90 நாட்களுக்கு இங்கு நிற்காது?! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Train

Prasanth Karthick

, புதன், 20 மார்ச் 2024 (15:05 IST)
ரயில்வே பணிகளுக்காக சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாக்குமரி வழியாக செல்லும் குருவாயூர் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ரயில்வே பராமரிப்பு மற்றும் பாதை அகலப்படுத்துதல் பணிகள் காரணமாக தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவைகள் மாற்றம் மற்றும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாகர்கோவில் – கன்னியாக்குமரி இடையே இரட்டை தண்டவாள பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் நாகர்கோவில் சந்திப்பில் நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை எழும்பூரில் இருந்து காலை 09.45 மணிக்கு புறப்படும் (ரயில் எண் 16127) சென்னை – குருவாயூர் விரைவு ரயில் மற்றும் மறுமார்க்கமாக குருவாயூரிலிருந்து 23.15க்கு புறப்படும் குருவாயூர் – சென்னை எக்மோர் விரைவு ரயில் ஆகியவை மார்ச் 27 முதல் ஜூன் 24 வரை நாகர்கோவில் ஜங்சனில் நிறுத்தப்படாது என்றும், நாகர்கோவில் டவுன் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? செல்வப் பெருந்தகை தகவல்