Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

highcourt

Senthil Velan

, வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (18:24 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்தாண்டு கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
 
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 11 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

 
இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி..!