Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொகுதிக்கு வராமல் ஆர்கே நகரில் ஆட்டம் போட்டுவிட்டு மக்களை மிரட்டும் எம்எல்ஏ!

தொகுதிக்கு வராமல் ஆர்கே நகரில் ஆட்டம் போட்டுவிட்டு மக்களை மிரட்டும் எம்எல்ஏ!

தொகுதிக்கு வராமல் ஆர்கே நகரில் ஆட்டம் போட்டுவிட்டு மக்களை மிரட்டும் எம்எல்ஏ!
, வியாழன், 14 டிசம்பர் 2017 (13:17 IST)
கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ ப.ஆறுமுகம் தொகுதிப் பக்கம் வராமல் இருந்ததால் அதனை கேள்விக்கேட்ட இளைஞரை தொலைப்பேசியில் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
 
கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் பல மாதங்களாக திறக்காமல் மூடியே கிடக்கிறது. இதனால் தங்கள் எம்எல்ஏவை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தாருங்கள் என சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 
இந்நிலையில் எம்எல்ஏ ப.ஆறுமுகம் கடந்த 7-ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக  வேட்பாளரை ஆதரித்து ஜீப்பில் நின்று குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.
 
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தர்வகோட்டை தொகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து எம்எல்ஏ ஆறுமுகத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்கே நகர்ல இருக்கீங்களே என்று கேட்டுள்ளார்.
 
அதற்கு எம்எல்ஏ ஆறுமுகம், நீ யார் என்னை கேள்வி கேட்க? சிங்கப்பூர்ல இருந்து பேசுற நீ யார்? பண்ணையடிக்க போனா அதை மட்டும் செய்யனும். என் தொகுதியில இருந்து கேட்டா பதில் சொல்வேன் என்றுள்ளார்.
 
சொந்த தொகுதியை பார்க்காம ஆர்கே நகர்ல என்ன வேலை? கந்தர்வகோட்டைக்கும் ஆர்கே நகருக்கும் என்ன சம்மந்தம் என்று அந்த இளைஞர் மீண்டும் கேட்க, நீ எந்த ஊர் என்று மிரட்டல் தொணியில் எம்எல்ஏ பேச்சை தொடர்கிறார். இந்த ஆடியோவும் தற்போது பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிஷா கொலை வழக்கு ; கொலையாளிக்கு தூக்கு தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு