Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூனியக்கார விஷால்.. என்னையும் நடிகர் சங்கத்திலிருந்து தூக்கி விடு : நடிகை ராதிகா சாடல்

சூனியக்கார விஷால்.. என்னையும் நடிகர் சங்கத்திலிருந்து தூக்கி விடு : நடிகை ராதிகா சாடல்

சூனியக்கார விஷால்.. என்னையும் நடிகர் சங்கத்திலிருந்து தூக்கி விடு : நடிகை ராதிகா சாடல்
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (12:18 IST)
நடிகரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான சரத்குமாரையும், ராதாரவியையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி நடிகர் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர்கள் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ராதிகா சரத்குமார் “ நடிகர் சங்கத்தில் சூனியக்கார வேட்டை தொடங்கி விட்டது. 100 கோடி ஊழல் என்றார்கள். தற்போது வேறு தொகை சொல்கிறார்கள். எந்த விளக்கமும் கேட்கப்படமால், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள். இது முதிரிச்சியில்லாத சிந்தனையாக தெரிகிறது. 
 
இதற்கு என்னதான் முடிவு?.. எந்த ஆதரமும் இல்லாமல் புகார் கூறுகிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் மனக்சப்பை அழிக்க வேண்டும். இன்னும் நீங்கள் வளர வேண்டும். உங்களுக்குள் ஏராளாமன வெறுப்பு சிந்தனை உள்ளது” என்று காட்டமாக கூறியுள்ளார். 
 
மேலும், இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டதற்காக என்னையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள்...” என்று ராதிகா கிண்டலடித்துள்ளார். 
 
அவரின் அனைத்து டிவிட்களையும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாலர் கார்த்தி ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்குதல்: வெகுண்டெழுந்த விஜயகாந்த்!