Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா செல்வமணி சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா செல்வமணி சென்னை மருத்துவமனையில் அனுமதி..!
, சனி, 10 ஜூன் 2023 (09:15 IST)
ஆந்திர மாநில அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா செல்வமணி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ரோஜா என்பதும் அதன் பின்னர் அவர் ஆந்திர மாநில அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது ரோஜாவுக்கு சில முக்கியத்துவமான பதவி அளிக்கப்பட்டது என்பதும் தற்போது அவர் ஆந்திர மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரோஜா செல்வமணி கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை அறிக்கை எதிரொலி: முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்..!