Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை கடத்தல் - வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது

குழந்தை கடத்தல் - வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது
, வெள்ளி, 11 மே 2018 (12:09 IST)
குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ் ஆப்பில் தவறான தகவலை பதிவிட்ட வீரராகவன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி  பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் மனநோயாளி ஒருவரை குழந்தை திருடன் எனக் கருதி மக்கள் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். அதேபோல் கடலூரில் ஒரு பெண் தாக்கப்பட்டுள்ளார்.
webdunia
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் தவறான தகவலை பரப்பிய, திருவண்ணாமலை புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் சம்மர் சேல்: ஸ்மார்ட்போன் மீது 35% வரை தள்ளுபடி...