Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 நாட்கள் காதலன் ரூமில் தங்கியிருந்த இளம்பெண்: கடைசியில் தூக்கில் தொங்கிய அவலம்

3 நாட்கள் காதலன் ரூமில் தங்கியிருந்த இளம்பெண்: கடைசியில் தூக்கில் தொங்கிய அவலம்
, திங்கள், 10 டிசம்பர் 2018 (15:15 IST)
காதலன் வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த திருப்பூரை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருக்கும் மஞ்சுளாவிற்கும் பழக்கம் ஏற்படு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
 
இந்நிலையில் கடந்த 6 ந் தேதி கார்த்திக் வீட்டிற்கு சென்றிருந்த மஞ்சுளா, அவருடன் ஒரே ரூமில் தங்கியுள்ளார். இந்த விஷயம் கார்த்திக்கின் வீட்டாருக்கே தெரியாதாம். இதற்கிடையே நேற்று மஞ்சுளா கார்த்திக்கின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மஞ்சுளாவின் உடலை மீட்டனர். மஞ்சுளாவின் உடலைப் பார்த்து அவரின் தாய் கதறி அழுதார். தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக மஞ்சுளாவின் தாயார் கூறினார்.
 
இதனையடுத்து போலீஸார் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டில் கணவன் செய்த மன்மத லீலைகள்: அதிர்ந்து ஷாக் ஆன மனைவி