Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.... 30க்கும் மேற்பட்டோர் காயம்

vilupuram
, திங்கள், 29 மே 2023 (12:43 IST)
விழுப்புரம் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து  ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சென்னை - கும்பகோணம் தேசிய  நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனார்.  அருகில் உள்ள மக்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இப்பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட மாபெரும் பலா திருவிழா!