Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடம்பாக்கத்தில் ரயில் மோதி இருவர் பரிதாப பலி

கோடம்பாக்கத்தில் ரயில் மோதி இருவர் பரிதாப பலி
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (08:18 IST)
ரயில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து இன்னொரு பிளாட்பாரம் செல்ல அதற்கென இருக்கும் வழிகளில் செல்லாமல் ஒருசில பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரயில் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை அவ்வப்போது விழிப்புணர்வை பயணிகளுக்கு ஏற்படுத்தி வந்தபோதிலும் ஒருசில நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு பேர் எதிர்பாராத வகையில் ரயில் மோதி உயிரிழந்ததாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த விபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில் ரயில் மோதி உயிரிழந்தவர்களில் ஒருவர் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்துள்ளது. இன்னொருவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.கே.எஸ் இளங்கோவன் பதவி இழந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்